இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்வு இன்று 28ம் திகதி திருகோணமலையில் இடம் பெற்றது.
திருகோணமலை சல்லி கிராமத்தில் இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோருடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் ச.குகதாசன் மற்றும் செயலாளர் க.செல்வராஜா பொருளாளர் வெ.சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக தெளிவு படுத்தலும் பொது மக்கள் குறைகள் மற்றும் ஐயங்களுக்கு பதிலளிக்கப்பட்டது. அத்துடன் கிராமத்தில் உள்ள குறைபாடுகளும் பார்வையிட்டனது.
வ. ராஜ்குமா்