Saturday, May 18, 2024

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்புற நடைபெற்ற மகளீர் தின நிகழ்வு

Must read

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்புற நடைபெற்ற மகளீர் தின நிகழ்வு 
உலக மகளீர் தினத்தினை கொண்டாடும் முகமாக முல்லைத்தீவு மாவட்ட செயலக்தில் மகளீர் தின நிகழ்வு இன்றைய தினம்   காலை 9.30 மணிக்கு பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் கிராமிய நிர்வாக கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்றது. 
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு  மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். 
”பொது அமைப்புக்களில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பதநூடாக பெண்களை வலுவூட்டுதலும் அதன் மூலமாக சமூக அபிவிருத்தியும்” என்னும் தொனிப்பொருளில் இந்த மகளீர் தின நிகழ்வு நடைபெற்றது.
சர்வதேச மட்டத்தில் ஓட்டப்போட்டியில் முதுமையிலும் சாதனை புரிந்துவரும் முல்லைத்தீவு மாவட்ட வீராங்கனை திருமதி எஸ்.அகிலாண்டநாயகி இந் விழாவில் கௌரவிக்கப்பட்டார்.  71 வயதிலும் அகிலாண்டநாயகி  இன்றுவரை சாதனை படைத்துக்கொண்டிருக்கின்றமை அனைவரையும் வியக்க வைத்தது. 
இன்றைய இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன்(நிர்வாகம்) , பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு .கே.லிங்கேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ம.கி.வில்வராஜா, மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திருமதி லிசோ கேகிதா, உலக உணவுத்திட்டத்தின் மாவட்ட அலுவலகர் திருமதி ஜெயபவாணி, மாவட்ட பதிவாளர்,மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர், முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கும் பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிரதேச சபைகளின் பெண் உறுப்பினர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Shanmugam Thavaseelan
- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article