Friday, April 19, 2024

எம் வாக்குறுதிகளை நம்பியே மக்கள் தெரிவு செய்தார்கள் – ஜனாதிபதி

Must read

Maithripala-newநாட்டு மக்கள் தேர்­தலின் போது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தின் மூலம் நாம் முன்­வைத்த விட­யங்­களை நாம் நிறை­வேற்­றுவோம் என்ற நம்­பிக்­கை­யு­ட­னேயே எம்மைத் தெரி­வு­செய்­தார்கள் என நான்­நம்­பு­கிறேன். அதே போல் கடந்த ஒரு வருட காலத்தை எடுத்­துக்­கொண்டால் இந்த நாட்டின் அர­சியல்வாதி­க­ளுக்கும் அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் நாட்டு மக்­க­ளுக்கும் அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்­துச் ­செல்­வது பற்­றிய ஒரு புதிய அனு­ப­வத்­தையே நாம் பெற்­றுக்­கொ­டுத்­துள்ளோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்க தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் பொதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன் தொகுப்பு,

கேள்வி: நீங்கள் ஆட்­சிக்கு வந்து இன்­றைக்கு ஒரு வரு­டமும் இரண்டு மாதங்­களும் கடந்­து­சென்­றுள்ள இவ்­வே­ளையில் உங்கள் தலை­மைத்­து­வத்தின் கீழ் இந்­நாட்டின் சமூக அர­சியல் பொரு­ளா­தார துறை­களில் ஏற்­பட்­டி­ருக்கும் மாற்­றங்கள் பற்­றிய உங்கள் மதிப்­பீட்டை தெரிந்­து­கொள்ள விரும்­பு­கின்றேன்?
பதில்: ஆரம்­பத்தில் நீங்கள் குறிப்­பிட்­டது போல் நான் இந்தப் பத­வி­யினை ஏற்று ஒரு வரு­டமும் இரண்டு மாதங்­களும் கடந்து சென்­றுள்ள இக்­கால எல்­லைக்குள் நான் செய்­தவை என்ன? என்ன நடந்­துள்­ளது? மகிழ்ச்­சி­ய­டையக் கூடிய நிலை­மையில் நாம் உள்­ளோமா? என சிலர் கேட்­கின்­றனர்.
இந்த நாட்டு மக்கள் தேர்­தலின் போது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தின் மூலம் நாம் முன்­வைத்த விட­யங்­களை நாம் நிறை­வேற்­றுவோம் என்ற நம்­பிக்­கை­யு­ட­னேயே எம்மைத் தெரி­வு­செய்­தார்கள் என நான்­நம்­பு­கிறேன். அதே போல் கடந்த ஒரு வருட காலத்தை எடுத்­துக்­கொண்டால் இந்த நாட்டின் அர­சியல்வாதி­க­ளுக்கும் அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் நாட்டு மக்­க­ளுக்கும் அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்­துச் ­செல்­வது பற்­றிய ஒரு புதிய அனு­ப­வத்­தையே நாம் பெற்­றுக்­கொ­டுத்­துள்ளோம்.
அது எனக்கும் பிர­தமருக்கும் அமைச்­ச­ர­வைக்கும் பாரா­ளு­மன்­றத்­திற்கும் மக்­க­ளுக்கும் ஒரு புதிய அனு­ப­வ­மாகும். 60 வரு­டங்­க­ளுக்கு மேலாக ஆட்­சி­ய­மைப்­ப­தற்கும் ஆளும் கட்­சி­யினை தோல்­வி­ய­டை­யச்­செய்­வ­தற்கும் இரு­புறங்­களில் இருந்து போரா­டிய இரு பிர­தான கட்­சி­களும் ஒன்­றிணைந்து ஆட்­சி­செய்­கின்­ற­மையே அந்தப் புதிய அனு­ப­வ­மாகும். ஒரு­புறத்தில் இது மிகவும் சிக்­கல்­மிக்­க­தாகும். இல­கு­வான விட­ய­மல்ல என்­ப­தையும் நாம் அறிவோம். நாட்டு மக்­களும் இரண்டு கட்­சி­களின் அங்­கத்­த­வர்­க­ளாக பிரிந்தே இருக்­கின்­றனர். ஆகையால் கருத்து ரீதி­யான இந்த வேறு­பாடு இறந்­த­வர்­களின் வீடு­க­ளிலும் சரி கல்­யாண வீடு­க­ளிலும் சரி வேறு இடங்­க­ளிலும் சரி இந்த பாகு­பாடு காணப்­பட்­டே­வ­ரு­கின்­றது. பொது­மக்கள் மாத்­தி­ர­மன்றி கீழ்­மட்டம் முதல் மேல்­மட்டம் வரை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முதல் அமைச்­சர்கள் வரை புதிய அரசின் இந்த புதிய அணு­கு­முறை பல்­வேறு பிரச்­சி­னை­களை தோற்­று­வித்­துள்­ளது.
அப்­ப­டி­யி­ருந்த போதிலும் நாம் ஒரு புதிய பய­ணத்தை மேற்­கொள்ள வேண்டும் என்­ப­த­னா­லேயே இந்­நாட்டின் பிர­தான கட்­சி­களும் எமது வேலைத்­திட்­டத்தை ஆத­ரிக்­கின்ற ஏனைய கட்­சிகள், மக்கள் அமைப்­புகள் ஆகி­யன ஒரு இணக்­கப்­பாட்­டுக்கு வந்­தி­ருக்­கின்­றன. உலக நாடு­க­ளிலும் இவ்­வா­றான நிலை­மை­களைக் காணக்­கூ­டி­ய­தா­க­வே­யுள்­ளது.
உலக நாடு­களில் முன்­ன­ணியில் திகழும் ஜேர்மன் நாட்­டிலும் இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைந்தே ஆட்­சி­செய்து வரு­கின்­றன. அவர்கள் அதை சிறப்­பாக செய்­து­வ­ரு­கின்­றன. பொரு­ளா­தார தொழி­நுட்ப துறை­களில் ஐரோப்­பிய நாடு­க­ளுக்கே தலை­மைத்­து­வத்தைப் பெற்­றுக்­கொ­டுக்­கின்ற ஜேர்­ம­னி­யினால் இவ்­வித அர­சியல் முறை­யினை சிறப்­பாக முன்­னெ­டுக்க முடி­யு­மாக இருந்தால் நாமும் உலக நாடு­க­ளுடன் இணைந்து முன்­னோக்கி செல்­லு­கின்ற ஒரு நாடு என்­ற­வ­கையில் நமது நாட்­டுக்கு ஏற்ப இந்­நி­லை­மை­களைக் கையா­ளுதல் வேண்டும்.
ஜேர்மன் நாடு கையாளும் அனைத்து முறை­களும் எமக்குப் பொருந்­தாது என்­பது உண்மை. அவர்­க­ளையே நாம் பின்­பற்ற வேண்டும் என்றும் இல்லை. ஆகையால் எமது சமூக பொரு­ளா­தார, கலா­சார தன்­மை­க­ளுக்கு ஏற்ப நமது நாட்­டுக்­கான ஆட்­சி­மு­றை­யினை நாம் உரு­வாக்கிக் கொள்ள வேண்டும்.
இந்தப் பின்­ன­ணி­யி­லேயே எம்மால் மன­நி­றைவு கொள்ள முடி­யுமா என்ற கேள்வி எழு­கின்­றது. உண்­மை­யி­லேயே நாம் கடந்து வந்­துள்ள ஒரு வரு­டத்­திற்கு சற்று அதி­க­மான கால எல்­லையில் கண்­ணுக்கு புலப்­படும் பௌதிக ரீதி­யான செயற்­பா­டு­களை காணக்­கூ­டி­ய­தாக இல்லை என்­பது உண்­மையே. சிறி­த­ளவில் அப்­ப­ணிகள் நடை­பெற்­றுள்ள போதிலும் இந்­நாட்டு மக்கள் எதிர்­பார்க்­கின்ற அளவில் அவை நடை­பெ­ற­வில்லை. காரணம் நமது நாட்டு மக்கள் வீதி­களை அமைத்தல், கட்­டடங்­களை எழுப்­புதல் ஆகி­ய­ன­வற்­றையே அர­சாங்­கங்­க­ளி­ட­மி­ருந்து எதிர்­பார்க்­கின்­றனர்.
அத­னுடன் ஒப்­பிட்டுப் பார்க்­கையில் எமது அரசின் இந்த ஒரு வரு­ட­காலம் சற்று வித்­தி­யா­ச­மா­கவே முன்­ன­கர்ந்­து ­சென்­றுள்­ளது. நமது நாட்­டுக்குத் தேவை­யான மக்­களின் ஜன­நா­யகம், சுதந்­திரம் ஆகி­ய­வற்றை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான செயற்­பாட்டின் ஒரு அங்­க­மா­கவே 19ஆவது சீர்­தி­ருத்தம், சுயா­தீன ஆணைக் குழுக்கள் ஆகிய செயற்­பா­டுகள் இவ்­வ­ர­சினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எமது சமூ­கத்தின் மாற்­றத்­திற்குத் தேவை­யான, ஆயினும் சிலரின் பரி­கா­சத்­திற்கும் கேலிக்கும் அவ­தூ­று­க­ளுக்கும் கார­ண­மாக அமைந்­துள்ள நல்­லாட்­சி­யினை ஏற்­ப­டுத்­து­வதன் ஆரம்ப கட்­ட­மா­கவே எமது இச்­செ­யற்­பா­டுகள் அமைந்­தி­ருக்­கின்­றன. சிலர் கேட்­பது போல் இந்த அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் கண்­ணுக்குப் புலப்­ப­டக்­கூ­டிய வகையில் அமை­ய­வில்லை என்­ப­தையும் எமது வேலைகள் மந்­த­க­தி­யா­கவே நடை­பெ­று­கின்­றன என்­ப­து­பற்றி பொது­மக்கள் கூறி­வ­ரு­வ­தையும் நான் ஏற்­றுக்­கொள்­கின்றேன்.
எதனால் இத்­தா­ம­தங்கள் ஏற்­ப­டு­கின்­றன? நானும் அமைச்­ச­ராக இருந்த எமக்கு முந்­திய ஆட்­சி­யா­னது வீதி­களை அமைக்­கின்ற போது அந்த வீதியை அமைக்­கப்­போ­வ­தா­கவும் அதைக் குறிப்­பிட்ட 3 நிறு­வ­னங்­க­ளுக்கு கொடுக்­கப்­போ­வ­தா­கவும் அறி­வித்து அனு­மதி பெற்ற மறு­தி­னமே அந்­நிர்­மாணப் பணி­களை ஆரம்­பிக்கும் சுபா­வத்தைக் கொண்­டி­ருந்­தது. அதே­போன்று எந்­த­வொரு செயற்­றிட்­டத்­திற்கும் கேள்­விப்­பத்­தி­ரங்கள் கோரப்­ப­டு­வ­து­மில்லை. ஆனால் எம்மை ஆட்­சிக்குக் கொண்­டு­வ­ரு­வ­தற்­காக வாக்­க­ளித்­த­வர்கள் நல்­லாட்­சி­யினை எதிர்­பார்த்தே வாக்­க­ளித்­தனர். அதன் முதல் அங்­க­மாக நிதி முகா­மைத்­துவம், நிதியை கையா­ளு­வது பற்­றிய ஒழுங்­குகள் ஆகி­ய­வற்றைப் பின்­பற்றும் நல்­லாட்­சி­யி­னையே எதிர்­பார்த்­தனர்.
ஆகையால் கடந்த ஓராண்டு காலப்­ப­கு­தியில் முன்­னெ­டுக்­கப்­பட்ட அனைத்து வேலைத்­திட்­டங்­களும் கேள்­விப்­பத்­திரம் கோரப்­பட்டே செயற்­ப­டுத்த வேண்டும் என்ற கொள்­கையை உறு­தி­யாகக் கடைப்­பி­டித்­து­வந்­துள்ளோம். மேற்­கு­றிப்­பிட்ட தாம­­தத்­திற்கு இதுவே முக்­கிய கார­ண­மாகும். அதற்கு மாறாக நாம் ஆட்சி பீடம் ஏறிய நாள் முதல் முன்­னைய அரசு கடை­ப்பி­டித்­து­வந்த நினைத்­ததை செய்யும் முறையை பின்­பற்­றி­யி­ருந்­தி­ருப்­போ­மாயின் நாம் ஆட்­சிக்கு வந்த நாள் முதலே அது­வ­ரையில் வழ­மையில் இருந்­து­வந்த செயற்­பா­டுகள் அதே வேகத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்கும். ஆயினும், நாடு எதிர்­பார்த்த அந்த உண்­மை­யான மாற்­றத்தை உரு­வாக்கும் நோக்கில் உரிய முறையில் செயற்­ப­டுத்தும் கொள்­கை­யி­னையே நாம் உறு­தி­யாகக் கடைப்­பி­டித்­து­வந்­துள்ளோம்.
மறு­பு­றத்தில் ஒரு நாடு என்ற வகையில் முன்­னோக்கி செல்ல வேண்­டு­மாயின் அதற்­கான சர்­வ­தே­சத்தின் ஒத்­து­ழைப்பு மிகவும் அவ­சி­ய­மா­ன­தாகும். ஆயினும், 2015ஆம் ஆண்டு ஜன­வரி 8ஆம் திக­திக்கு முன் நமது நாடு சர்­வ­தேச ரீதியில் எந்த இடத்தில் இருந்­தது என்­பதை நாம் அனை­வரும் நன்கு அறிவோம். நாம் ஓரம்­கட்­டப்­பட்ட நிலை­யி­லேயே இருந்தோம். இன்­றைய உலகில் எந்­த­வொரு நாட்­டி­னாலும் சர்­வ­தே­சத்தின் ஒத்­து­ழைப்­பின்றி சுய­மாக செயற்­பட முடி­யாது. சர்­வ­தே­சத்தின் சமூக, பொரு­ளா­தார தொடர்­பு­களை பலப்­ப­டுத்­தி­ய­வாறே நாடு முன்­னோக்கி செல்­ல­வேண்­டி­யி­ருக்­கி­றது. அந்­த­வ­கையில் எமது அரசின் மீதான இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­திய போதும் அது­வ­ரையில் எமக்குக் கிடைக்­கா­தி­ருந்த சர்­வ­தேச சமூ­கத்தின் ஒத்­து­ழைப்பை நாம் பெற்­றுள்ளோம் என்­பதை எவரும் மறுப்­ப­தற்­கில்லை. இது கடந்த ஆண்டில் நாம் பெற்­றுக்­கொண்ட மிகப்­பெரும் வெற்­றி­யாகும்.
இன்று உலகில் அத்­தனை நாடு­க­ளையும் நாம் எமது நேச நாடு­க­ளாக மாற்­றி­யுள்ளோம். நாம் கண்­ணி­ய­மான முறை­யிலும் காத்­தி­ர­மான முறை­யிலும் நல்­லாட்­சியை முன்­னெ­டுத்­து­ வ­ரு­கின்றோம் என்ற நம்­பிக்­கையின் பேரி­லேயே சர்­வ­தே­சத்தின் இந்த ஒத்­து­ழைப்பு எமக்குக் கிடைத்­துள்­ளது. அத­னா­லேயே சர்­வ­தேச அமைப்­புக்கள் பெரு­ம­ள­வுக்கு தமக்கு உதவ முன்­வந்­தி­ருக்­கின்­றன. அண்­மையில் எமது நாட்­டுக்கு வரு­கை­தந்த ஆசிய அபி­வி­ருத்தி வங்­கியின் தலைவர் நம் நாட்டின் கல்வி, சுகா­தார, வீதி அபி­வி­ருத்­திக்கு பாரிய நிதி­யு­த­வி­களை எமக்கு வழங்க இணக்கம் தெரி­வித்தார். ஆகையால் நாட்­டினுள் சுதந்­தி­ரத்­தையும் ஜன­நா­ய­கத்­தையும் உறு­திப்­ப­டுத்­து­வ­துடன், நிதி­யொ­ழுக்­கத்தைப் பின்­பற்­றி­ய­வாறு நாட்டின் அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுப்­ப­தற்­காக நாம் மேற்­கொண்­டு­வரும் செயற்­றிட்­டங்­களும் நாட்டின் எதிர்­கா­லத்­திற்குத் தேவை­யான சர்­வ­தேச சமூ­கத்தின் ஒத்­து­ழைப்­பு­களை பெற்­றுக்­கொள்­வதும் நாட்டின் எதிர்­கா­லத்­திற்குத் தேவை­யான உண்­மை­யான மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான அத்­தி­வா­ரத்தை நாம் அமைத்­தி­ருப்­பதால் உண்­மை­யி­லேயே மகிழ்ச்­சி­ய­டையக் கூடிய நிலை­யி­லேயே நாம் இருக்­கின்றோம் என்­பதை என்னால் கூற­மு­டியும்.
கேள்வி: நாட்டின் நிலைமை பற்றி மகிழ்ச்­சி­ய­டையும் நிலைமை பற்றி நீங்கள் குறிப்­பிட்ட அதே­வேளை பௌத்த பிக்­கு­களை துன்­பு­றுத்­து­வ­தா­கவும் பௌத்த மதத்­திற்கும் அதன் செயற்­பாட்­டிற்கும் பாத­கத்­தினை ஏற்­ப­டுத்தும் வகையில் செயற்­ப­டு­வ­தா­கவும் படை­வீ­ரர்­களின் கீர்த்­திக்கு குந்­தகம் விளை­விக்கும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தா­கவும் சிலர் குற்றம் சாட்­டு­கின்­றனர். இதற்­கான உங்கள் பதில் என்ன?
பதில்: இவ்­வே­ளையில் இந்­நி­கழ்ச்­சி­யினை பார்த்­துக்­கொண்­டி­ருக்கும் நாட்டு மக்­க­ளிடம் ஒரு கேள்­வியைக் கேட்க விரும்­பு­கின்றேன். நானும் அமைச்­ச­ரா­க­வி­ருந்த கடந்த ஆட்­சியின் முன்னாள் ஜனா­தி­ப­திக்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இன்னும் இரண்டு ஆண்­டுகள் பத­வியில் இருக்­கக்­கூ­டிய வாய்ப்பு இருந்த பின்­ன­ணி­யிலும் அவர் எதற்­காக தேர்­தலை பிர­க­ட­னப்­ப­டுத்­தினார். நீங்கள் கேட்ட கேள்­விக்கும் நான் இங்கே கூறிய விட­யத்­திற்கும் எந்­த­வொரு தொடர்­புமே இல்­லையே என ஒருவர் நினைக்­கலாம். ஆனால் இன்­று­வரை முன்னாள் ஜனா­தி­ப­தியோ அவரை சார்ந்த பொறுப்­புக்­கூ­றத்­தக்க ஒரு­வரோ தமது ஆட்­சியை முன்­னெ­டுப்­ப­தற்­காக மேலும் இரண்டு ஆண்­டுகள் மிஞ்­சி­யி­ருந்த நிலையில் எதற்­காகத் தேர்­தலை ஏன் பிர­க­ட­னப்­ப­டுத்­தினார் என்­ப­தற்கு இது­வரை விடை­கூ­ற­வில்லை.
2015 ஆம் ஆண்டு ஜன­வரி 08ஆம் திகதி தேர்­தலை பிர­க­ட­னப்­ப­டுத்­தா­தி­ருந்தால் முன்னாள் ஜனா­தி­ப­தியே தற்­போதும் ஜனா­தி­ப­தி­யாக இருந்­தி­ருப்பார். ஆயினும் முன்­னைய அர­சாங்­கத்தின் பொறுப்­பு­மிக்க ஒரு அமைச்­ச­ராக இருந்த நான் அறிந்­த­வ­கையில் முன்னாள் ஆட்­சி­யா­ள­ருக்கும் அவ­ரது சகாக்­க­ளுக்கும் நம் நாட்­டுக்­குள்ளும் சர்­வ­தே­சத்­திலும் முகம்­கொ­டுக்­க­ நேர்ந்­தி­ருந்த சில முக்­கிய சவால்­க­ளுக்கு முகம்­கொ­டுக்­க­மு­டி­யாத நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. விடை­கா­ண­மு­டி­யாத அவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கு விடை­காணும் வகையில் அவ­சர தேர்தல் ஒன்றை பிர­க­ட­னப்­ப­டுத்­த­வேண்டும் என்ற தீர்­மானம் அவர்­களால் எடுக்­கப்­பட்­டது. முக்­கிய பல சம்­ப­வங்கள் பற்றி தற்­போது சில விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. எக்­னெ­லி­கொட சம்­பவம், லசந்த விக்­ர­ம­துங்க கொலைச்­சம்­பவம், ரவி­ராஜின் கொலை, தாஜுதீன் கொலை ஆகிய விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.
நான் ஜனா­தி­பதி பத­வியை ஏற்­ப­தற்கு முன் பல வரு­டங்­க­ளாக மேற்­கூ­றிய சம்­ப­வங்கள் எவ்­வாறு ஏற்­பட்­டன என்­பது பற்றி இந்­நாட்டு மக்­களால் கேள்வி எழுப்­பப்­பட்டு வந்­தது. நாட்டு மக்­களால் எழுப்­பப்­பட்ட கேள்­விகள் ஜெனிவா வரை சர்­வ­தேச மய­மா­னது. இவற்­றுக்­கான பதில் என்ன என சர்­வ­தேசம் எம்­மிடம் வின­வி­யது. அத்­தோடு யுத்தம் நிகழ்ந்த கால­கட்­டத்தில் மனித உரி­மைகள் மீறப்­பட்­டன என்ற குற்­றச்­சாட்டை எல்.டீ.டீ.ஈ. பயங்­க­ர­வா­தத்­தி­லி­ருந்து தப்பி வெளிநாடு சென்­றி­ருந்த குழு­வி­னர்கள் பல்­வேறு வகையில் சர்­வ­தே­ச­ம­யப்­ப­டுத்­தினர்.
அந்­த­கா­ல­கட்­டத்தில் ஐக்­கிய நாடுகள் சபை உட்­பட சர்­வ­தேச சமூ­கத்­தினால் தொடர்ந்தும் இது­பற்றி அழுத்தம் கொடுக்­கப்­பட்­டது. அதே­போன்று பொது­ந­ல­வாய மகா­நாடு இலங்­கையில் நடத்­தப்­பட்ட போது அம்­ம­ா­நாட்டில் கலந்­து­கொள்ள பல வெளிநாட்டுத் தலை­வர்கள் தயக்கம் காட்­டினர். பொது­ந­ல­வாய நாடு­களின் சில தலை­வர்கள் தமது வரு­கையை தவிர்த்­துக்­கொண்­டனர். இந்த நாட்டில் மனித உரி­மைகள் மீறப்­பட்­டி­ருக்­கின்­றன. ஜன­நா­யகம் இல்­லாத நிலை தோன்­றி­யுள்­ளது. ஊழல் மிக்க ஆட்சி நில­வு­கின்­றது. சுதந்­திரம் இல்­லாமல் செய்­யப்­பட்­டுள்­ளது போன்ற கார­ணங்­களை முன்­வைத்த சில அரச தலை­வர்கள் நமது நாட்­டுக்கு விஜயம் மேற்­கொள்­வதை தவிர்த்­துக்­கொண்­டனர்.
சில முக்­கிய சர்­வ­தேச தலை­வர்கள் நமது நாட்­டுக்கு வரு­கை­தந்த போதிலும், நம்­நாட்டு பொது­மக்கள் பலரை சந்­தித்து விட­யங்­களைக் கேட்­ட­றிந்­து­கொண்ட அவர்கள் நமது நாட்டில் பாரிய பிரச்­சி­னைகள் இருப்­ப­தா­கவும் அவற்றை துரி­த­மாக தீர்த்­துக்­கொள்­ள­வேண்டும் என்றும் கோரி­னார்கள். ஆக அன்­றைய அர­சுக்கு நம்­நாட்டு மக்­க­ளாலும் சர்­வ­தேச சமூகத்­தி­னாலும் முன்­வைக்­கப்­பட்ட வினாக்­க­ளுக்கு விடை­கூ­ற­மு­டி­யாத ஒரு நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. அந்த சூழ்­நி­லை­யி­லேயே அவ­சர அவ­ச­ர­மாக நடத்­தப்­பட்ட தேர்­தலில் 42 நாட்­களில் ஆட்­சி­யி­லி­ருந்த ஆட்­சியை மாற்றி மக்­களின் எதிர்­பார்ப்­பு­களை நிறை­வேற்றும் வகையில் நாம் ஆட்­சிக்கு வந்தோம். அப்­படி ஆட்­சிக்கு வந்த நாம் கடந்த அர­சாங்­கத்­தினால் விடை­கூ­ற­மு­டி­யா­தி­ருந்த வினாக்­க­ளுக்கு விடை­ய­ளித்­த­துடன், நாட்டு மக்­களின் எதிர்­பார்ப்­பு­களை நல்ல முறையில் நிறை­வேற்­று­வ­தற்­கா­கவே நாம் ஆட்­சி­ய­மைத்தோம். இதன்­போது நாம் எமது அர­சியல் விஞ்­ஞா­ப­னத்தில் முன்­வைத்­த­வற்றை நிறை­வேற்­று­வதே எமது கட­மை­யாகும்.
படை­வீ­ரர்­க­ளுக்கு பங்கம் விளை­விக்­கப்­ப­டு­கி­றது என்ற விட­யத்தை எடுத்­துக்­கொண்டால், சர்­வ­தேச ரீதியில் எமது நாட்­டுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு பதி­ல­ளிக்க வேண்­டு­மாயின் எமது நாட்டின் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு உரிய முறையில் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு உண்­மையை வெளிப்­ப­டுத்தி அக்­குற்­றச்­சாட்­டுக்­களில் இருந்து மீள வேண்டும். அக்­குற்­றச்­சாட்­டுக்­களில் இருந்து மீளும் வகையில் ஏதேனும் ஒரு இடத்தில் நிகழ்ந்த குற்­றங்­க­ளுக்கு உரிய தண்­ட­னையை வழங்­கு­வது சரியா? அல்­லது எமது நாட்­டுக்­காக பாடு­பட்ட நாட்டின் நற்­பெ­யரை காப்­பாற்­றிய அனு­ப­வமும் ஆற்­றலும் மிக்க எமது படை­யினர் மீது அவ­தூ­று­களை சுமத்­து­வ­தற்கு இட­ம­ளிப்­பது சரியா?

அல்­லது சர்­வ­தேச தரத்தில் ஏற்­றுக்­கொள்­ளப்­படும் தர­மான கீர்த்­தி­மிக்க முப்­ப­டை­க­ளாக எமது படை­களின் பெயர்­களை தக்­க­வைத்­துக்­கொள்­வதா? யுத்­த­காலம் தொடர்­பாக எழுப்­பப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்கள் கார­ண­மாக எமது படை­யி­ன­ருக்கு எத்­தனை பயிற்சி வாய்ப்­பு­களை இழக்க நேரிட்­டது. பல தசாப்­தங்­க­ளாக அமெ­ரிக்­காவால் எமது படை­யி­ன­ருக்கு வழங்­கப்­பட்டு வந்த பயிற்­சி­யினை இழக்க நேரிட்­டது. இந்­தியா உட்­பட இன்னும் பல நாடு­களில் இருந்து கிடைக்­கப்­பெற்ற பல பயிற்­சி­களை இழக்க நேர்ந்­தது. எமது புதிய அரசு ஆட்­சிக்கு வந்­ததன் பின் அவ்­வாறு இழக்க நேர்ந்த வாய்ப்­பு­களை மீண்டும் எமது படை­யி­ன­ருக்கு பெற்­றுக்­கொள்ள முடிந்­துள்­ளது. உலக தரத்­தி­லான பயிற்­சி­களை அனு­ப­வங்­களை அறி­வினை பெற்­றுக்­கொள்ளும் வாய்ப்பு இப்­போது எமது படை­யி­ன­ருக்கு கிடைக்­கப்­பெற்­று­வ­ரு­கி­றது. முதலில் நான் குறிப்­பிட்ட அந்த சம்­பவங்கள் தொடர்­பான விசா­ர­ணைகள் எந்த ஒரு விசா­ர­ணையும் பாது­காப்புப் படை­யி­னரை குறி­வைத்து ஆரம்­பிக்­கப்­பட்­ட­வை­யல்ல.
எக்னெ­லி­கொட சம்­ப­வத்தை எடுத்­துக்­கொண்டால் உள்­நாட்­டிலும் வெளிநாட்­டிலும் அது பெரிய அளவில் கவ­னத்தை ஈர்த்த ஒரு சம்­ப­வ­மாகும். ஆகையால் அதன் உண்மை நிலையை அறி­வ­தற்­காக விசா­ர­ணை­யினை ஆரம்­பிக்க நேர்ந்­தது. விசா­ரணை அவ்­வாறு முன்­னோக்கி செல்லும் போதே அச்­சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் என்­ற­வ­கையில் சில அரச படை­யினர் மீது விசா­ரணை மேற்­கொள்ள வேண்­டி­வந்­துள்­ளது. விசா­ரணை முடிவில் அப்­ப­டை­வீ­ரர்கள் குற்­ற­வா­ளி­களா? சுற்­ற­வா­ளி­களா? என்­பது நிரூ­ப­ண­மாகும். இவ்­வா­றான சம்­ப­வங்கள் பற்றி நியா­ய­மான விசா­ர­ணை­களைக் கோரும் உள்­நாட்­டுக்கும் வெளிநாட்­டுக்கும் பதி­ல­ளிக்­க­வேண்­டி­யது அரசின் கட­மை­யாகும். அவ்­வாறு பதி­ல­ளிப்­பதன் மூலம் களங்­க­மற்ற தன்­மையை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வதன் மூலமே ஒரு நாடு என்ற வகையில் எம்மால் முன்­னோக்கிச் செல்ல முடியும்.
இங்கே பௌத்த பிக்­குகள் பற்றி நீங்கள் எழுப்­பிய வினாவைப் பார்ப்போம். சில பௌத்த பிக்­கு­மார்கள் நீதி­மன்றம் செல்ல நேர்ந்த போது அங்கே அவர்கள் நடந்­து­கொண்ட விதம் கார­ண­மாக அவர்­களை கைது­செய்­ய­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­ட­மைக்கு அர­சாங்­கமா குற்­ற­வாளி? அடுத்­த­தாக சட்­ட­வி­ரோ­த­மாக யானை­களை வைத்­தி­ருந்­தார்கள் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் பெளத்த பிக்கு உட்­பட இன்னும் பலர் மீது விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­ற­மையை எடுத்­துக்­கொண்டால் ஒரு கணம் இந்த பிக்­கு­மார்கள் பற்­றிய பிரச்­சி­னையை வைத்­து­விட்டு இப்­பி­ரச்­சினை எங்­கி­ருந்து வந்­தது என்­பது பற்றி சற்று பார்ப்போம். யானை திருட்­டுக்கள் எவ்­வாறு ஏற்­பட்­டன. இன்று இந்த நிகழ்ச்­சிக்கு வந்­து­கொண்­டி­ருக்கும் போது கூட திருட்டு யானை­களை வைத்­தி­ருந்த இரு நபர்கள் விசா­ர­ணை­ செய்­யப்­பட்டு யானைகள் மீட்­டெ­டுக்­கப்­பட்­ட­தாக வானொ­லியில் கூறக் கேட்டேன்.
காடு­களில் வாழ்ந்­து­வந்த இந்த யானை­களை திரு­டி­ய­வர்கள் யார்? அத்­தி­ருட்­டுக்கு உத­வி­ய­வர்கள் யார்? அதற்கு ஒத்­து­ழைத்­த­வர்கள் யார்? அவற்­றுக்கு உறு­து­ணை­யாக இருந்­த­வர்கள் யார்? வன­வி­லங்­குகள் பாது­காப்பு சட்­டத்தின் படி வன­வி­லங்­கு­களை வேட்­டை­யா­டுதல், திரு­டுதல், சட்­ட­வி­ரோ­த­மாக தம்­வசம் வைத்­தி­ருத்தல் ஆகிய அனைத்­துமே குற்­ற­மாகும். கடந்த காலங்­களில் பெரு­ம­ளவில் யானைகள் திரு­டப்­பட்­ட­தாக செய்­திகள் வெளிவந்த பின்­ன­ணி­யி­லேயே அவ்­வாறு திருடி தம்­வசம் வைத்­தி­ருந்த 37 யானைகள் பல்­வேறு நபர்­க­ளி­ட­மி­ருந்து மீட்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. ஒரு­போதும் நமது நாட்டில் நடக்­காத சம்­ப­வங்கள் கூட நடந்­தன.

வன­வி­லங்கு அத்­தி­யட்­ச­கர்­க­ளி­ட­மி­ருந்த யானைப் பதி­வேடும் காட்டு யானை­களும் கூட திரு­டப்­பட்­டன. நான் 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 9 ஆம் திகதி சுதந்­திர சதுக்­கத்தில் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்ற நேரம் வரை இந்த ஜனா­தி­பதி மாளி­கையில் கூட இரண்டு யானைகள் இருந்­ததே. இவ்­வா­றான செயல்கள் எந்­த­ளவு சட்­ட­பூர்­வ­மா­னவை? எந்­த­ளவு நியா­ய­மான செயல்? நான் இந்­நாட்டில் ஜனா­தி­ப­தி­யாக இருக்கும் காலப்­ப­கு­தியில் பௌத்த மதம், பௌத்த விகா­ரை­களை பலப்­ப­டுத்தும் எல்லா விட­யங்­க­ளையும் மேற்­கொள்வேன். பௌத்த தேரர்­களின் தேவை­களைப் பூர்த்தி செய்­வ­தற்கும் அவர்க­ளது உரி­மை­களைப் பாது­காப்­ப­தற்கும் தேவை­யான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்பேன்.
நம் நாட்டின் வசதி குறைந்த தூரப் பிர­தே­சங்­களில் சில நேரங்­களில் தமது தானத்தைக் கூட பெற்­றுக்­கொள்ள வழி­யில்­லாத தங்­கு­மிட வச­தி­க­ளற்ற பிக்­கு­மார்கள் கூட உள்­ளார்கள். ஆகையால் எமது அர­சாங்கம் கொள்கை ரீதி­யா­கவே தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட சில மிக குறைந்த எண்­ணிக்­கை­யி­லான பௌத்த பிக்­கு­மார்­க­ளுக்கு சகல வச­தி­க­ளையும் வழங்­கு­வ­தற்குப் பதி­லாக இந்­நாட்டில் வசிக்­கின்ற அத்­தனை பிக்­கு­மார்­க­ளுக்கும் அவர்­க­ளது நலன்­களைப் பாது­காக்கும் வகையில் அனைத்­து­ வ­ச­தி­க­ளையும் வழங்க திட்­ட­மிட்­டுள்­ளது. அத்­தோடு விகா­ரை­களை பாது­காக்கும் புதி­யதோர் அரச நிதி­யி­னையும் ஆரம்­பித்­துள்ளோம். அதே­போன்று அர­சுக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­கென கலா­நிதி பட்­டங்­க­ளையும் பேரா­சி­ரியர் பட்­டங்­க­ளையும் பெற்­றி­ருக்கும் பௌத்த பிக்­கு­மார்­களைக் கொண்ட தேசிய பிக்கு அறிஞர் மன்றம் ஒன்­றையும் அமைத்­துள்ளேன். மூன்று மாதங்­க­ளுக்கு முன்னர் மதங்­க­ளுக்கு இடையே நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் நோக்கில் தலைமை பிக்­கு­மார்­களை உள்­வாங்­கிய பிக்­கு­மார்­க­ளையும் ஏனைய மதத் தலை­வர்­க­ளையும் உள்­ள­டக்­கிய ஆலோ­சகர் சபை­யொன்­றையும் உரு­வாக்­கி­யுள்ளோம்.
கேள்வி: இந்த நல்­லாட்சி அர­சுக்கு எதி­ராக நம்­நாட்டின் இறை­மையை வெளிநாட்­ட­வர்­க­ளுக்கு தாரை­வார்த்­து­ கொ­டுப்­ப­தா­கவும் நமது நாட்­டுக்கு பாத­க­மாக அமை­கின்ற வெளிநாட்டு ஒப்­பந்­தங்­க­ளையும் செய்­து­கொள்­வ­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கின்­றது. இதற்­கான உங்­க­ளது பதில் என்ன?
பதில்: மிகச் சிறிய எண்­ணிக்­கை­யி­லான ஒரு பிரி­வி­னரே அவ்­வா­ற­ன­தொரு குற்­றச்­சாட்டை எம்­மீது சுமத்­து­கின்­றனர். ஆனால் மிகத் தெளிவாக நாம் நமது நாட்டின் அபி­வி­ருத்­தியை நோக்­காகக் கொண்டு சர்­வ­தேச ரீதியில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட சிறந்த அமைப்­பு­க­ளி­ட­மி­ருந்தும் முன்­னேற்­ற­ம­டைந்த உதவி நாடு­க­ளி­ட­மி­ருந்தும் எமக்குத் தேவை­யான ஒத்­து­ழைப்­பு­களைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும். அனைத்து நாடு­க­ளு­டனும் வர்த்­தக தொடர்­பு­க­ளையும் பேண­வேண்டும்.
கடந்த ஒரு வருட காலத்­திற்குள் அவ்­வா­றான பல நாடு­க­ளுக்­கான விஜ­யங்­களை நான் மேற்­கொண்டேன். எதிர்­வரும் மே மாதத்­திலும் ஜப்­பானில் இடம்­பெறும் உலகின் பலம்­மிக்க நாடு­களின் ஜீ–7 மகா­நாட்டில் கலந்­து­கொள்ள வரு­மாறு முதல் தட­வை­யாக என்னை அழைத்­துள்­ளார்கள். அது நம்­நாட்­டிற்கு மிகவும் சாத­க­மான ஒரு வாய்ப்­பாகும். இந்த நாடு­க­ளு­ட­னான பொரு­ளா­தார, கல்விக் கலா­சார அம்­சங்­களில் உற­வு­களை ஏற்­ப­டுத்­திக் ­கொள்தல் எமது நாட்டின் வளர்ச்­சிக்­கான ஒப்­பந்­தங்­களை ஏற்­ப­டுத்­திக் ­கொள்தல் மிகவும் அவ­சி­ய­மா­ன­தாகும். இந்த முயற்­சி­களை இதற்கு முன்­ன­தா­கவும் ஆட்­சியில் இருந்­த­வர்கள் பல தசாப்­தங்­க­ளாக ஆட்­சி­யி­லி­ருந்­த­வர்கள் மேற்­கொண்­டு ­வந்­துள்­ளார்கள். இருந்­த­போ­திலும் கடந்த ஓராண்டில் இந்த வெளிநாட்டு உற­வு­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வது துரித வளர்ச்­சியைக் கண்­டுள்­ளது.
கடந்த காலத்தில் இந்த நாடுகள் குறிப்­பாக ஐரோப்பா, அமெ­ரிக்கா உட்­பட பல நாடுகள் எம்மை விட்டு வில­கி­யி­ருந்­தன. இந்த நாடு­களின் பொரு­ளா­தார, தொழி­ல்நுட்ப, கல்வித் துறை வளர்ச்­சி­களை நம்­நாட்டு பிள்­ளை­க­ளுக்கு நாம் பெற்­றுக்­கொ­டுக்­கக்­கூ­டாதா? சில நாடு­க­ளுடன் ஏற்­ப­டுத்­திக்­கொள்ளும் உடன்­ப­டிக்­கைகள் மூலம் எமது நாட்டின் இறை­மைக்கு எந்­த­வி­த­மான பாத­கமும் ஏற்­ப­டா­த­வ­கையில் அமை­ய­வேண்டும் என்­பது பற்றி மிக ஆழ­மாக ஆராய்ந்து அறிந்­ததன் பின்­னரே நாம் உடன்­ப­டிக்­கை­களை ஏற்­ப­டுத்­திக்­கொண்­டுள்ளோம். நம்­நாட்டை அபி­வி­ருத்­தி­ய­டையச் செய்­வதே அதன் அடிப்­படை நோக்­க­மாகும். முன்­னைய அர­சாங்­கமே சீபா என்ற உடன்­ப­டிக்­கையை இந்­தி­யா­வுடன் ஏற்­ப­டுத்­திக்­கொண்­டது. அந்த உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்த எமது நாட்­டுக்கு பாத­க­மாக அமையக் கூடிய விட­யங்­களை அகற்றி நமது நாட்­டுக்கு சாத­க­மான ஒரு ஒப்­பந்­தத்­தினை இந்­தி­யா­வுடன் ஏற்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­கான பேச்­சு­வார்த்­தை­களில் நாங்கள் இப்­போது ஈடு­பட்­டு­வ­ரு­கிறோம்.
இது­வரை அந்த உடன்­ப­டிக்கை பற்­றிய இறுதி அறிக்­கை­யினை தயா­ரிக்­கவோ, உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­தி­டவோ இல்லை. இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தை­களே தற்­போது நடை­பெ­று­கி­ன்றன. அதை­ய­டுத்து அவ்­வொப்­பந்­தங்­களை மேற்­கொள்ள முன்னர் அவற்றில் என்ன உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன என்­பன பற்றி நாட்டு மக்­க­ளுக்கு பகி­ரங்­கப்­ப­டுத்­துவோம். பல்­லா­யி­ரக்­க­ணக்­கான வரு­டங்­க­ளாக நீடித்­து­ வ­ரு­கின்ற இரு நாட்டு உற­வு­களே எமக்கும் இந்­தி­யா­வுக்­கு­மி­டையே இருந்­து ­வ­ரு­கின்­றன. அதை உண­ராத சிலரே எம்­மீது அபா­ண்டமான குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­தி­ வ­ரு­கின்­றனர். அப்படிச் செய்கின்றவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலும் உள்ளனர்.
எமது நாடு இந்­தி­யா­வு­ட­னான மிக உயர்ந்த உற­வு­களை பண்­டா­ர­நா­யக்க அம்­மை­யா­ரி­னதும் இந்­தி­ரா­காந்தி அம்­மை­யா­ரி­னதும் ஆட்சிக் காலத்­தி­லேயே இருந்­து­வந்­துள்­ளது. நேரு குடும்­பத்­தி­ன­ரு­டனும் காந்தி குடும்­பத்­தி­ன­ரு­டனும் பண்­டா­ர­நா­யக்க குடும்­பத்­தி­னரே பேணிப்­பா­து­காத்­து­வந்­துள்­ளனர். அதனை மிக உயர்­வாக வர்­ணிக்­கின்­ற­வர்கள் இப்­போது நாம் பிர­தமர் மோடியுடன் முன்­பி­ருந்த பழைய நட்­பினை மீண்டும் ஏற்­ப­டுத்தி நாட்­டுக்கு நன்மை பயக்க முன்­வரும் போது இந்­தி­யா­வி­லி­ருந்து பொரு­ளி­ய­லா­ளர்கள் வரப்­போ­கின்­றனர். வைத்­தி­யர்கள் வரப்­போ­கின்­றனர். இந்­திய ஊழி­யர்கள் இங்­கு­வந்து குவி­வதால் நம்­நாட்­ட­வ­ருக்கு தொழில் வாய்ப்­புகள் இல்­லாது போகும். கல்விமான்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் இல்லாது போகும் என்றெல்லாம் கூறிவருகின்றனர்.
இப்­போது பேச்­சு­வார்த்தை மட்­டத்­தி­லி­ருந்து வரும் இலங்கை–இந்­திய உற­வு­களில் இவ்­வா­றான நாட்­டுக்கு பாத­க­மான எந்­த­வொரு அம்­சமும் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. நாங்கள் அர­சாங்கம் அமைத்­தி­ருப்­பது எமது நாட்­ட­வர்­க­ளுக்கு இருக்­கின்ற வாய்ப்­பு­களை இந்­தி­யர்­களைக் கொண்டு இல்­லா­தொ­ழிப்­ப­தற்­கா­கவா? இவ்­வா­றான குறு­கிய எண்­ணங்­க­ளு­ட­னான வெற்­றுப்­பேச்­சு­களும் அடிப்­ப­டை­யற்ற வாதங்­க­ளையும் எதனால் முன்வைக்கின்றார்கள் என்பது தான் புரியாமல் உள்ளது. இவர்­களின் இந்த விமர்­ச­னங்­க­ளுக்கும் குற்­றச்­சாட்­டுக்­கு­ளுக்கும் குறு­கிய அர­சியல் நோக்­கமே கார­ண­மாகும். ஆகையால் நமது நாட்டின் இறை­மைக்கு குந்­தகம் விளை­விக்கும் எமது நாட்­டுக்கு பாத­க­மாக அமையும் எந்த ஒரு ஒப்­பந்­தத்­திலும் கைச்­சாத்­தி­டப்­போ­வ­தில்லை என மிகத்­தெளிவாக கூற­வி­ரும்­பு­கிறேன். ஆகையால் எமது இந்த வேலைத்­திட்­டங்கள் பற்றி விமர்­சித்­து­ வ­ரு­கின்ற புத்­தி­ஜீ­வி­க­ளுக்கு எமது வேலைத்­திட்­டங்­களை தெளிவாக எடுத்­துக்­கூறி எமது செயற்­றிட்­டங்­களை வெளிப்­ப­டை­யாக செயற்­ப­டுத்­துவோம் என்­ப­தையும் அவை அனைத்­தையும் நாட்டின் நல­னுக்­கா­கவே செய்­ய­வி­ருப்­ப­தா­கவும் கூறிக்­கொள்ள விரும்­பு­கிறேன்.
ஆகையால் எவரும் எந்­த­வொரு பீதியும் கொள்­ளத்­தே­வை­யில்லை. ஒரு­போதும் நாம் இந்த நாட்டை எவ­ருக்கும் தாரை­வார்த்­துக்­கொ­டுக்­க­மாட்டோம் என்­ப­தையும் அதனை செய்ய நாம் ஆட்­சிக்கு வர­வில்லை என்­ப­த­னையும் இந்த நாட்டின் நன்­மைக்­காக பாரிய வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்­கா­கவும் நாட்டை முன்னேற்றுவதற்காகவுமே நாம் ஆட்சிக்கு வந்தோம் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article